மஞ்சுளா மாமி எனக்கு லோக்கல் சரக்கு அடிக்கிற கிக் - SexBaba
  • Tamil Sex Stories you can find on this page. Make sure your 18 above to read this. Share these stories to your friends and girlfriend. Each stories has a sharing button so that you can share these stories on social media. Categories you can find here Tamil Sex Stories. You can find many more categories of sex stories at the bottom of the page. If you like our stories then don’t forget to share our stories with your friends. More tamil kamaveri you can find it on other sites.

மஞ்சுளா மாமி எனக்கு லோக்கல் சரக்கு அடிக்கிற கிக்

hotaks444

New member
Joined
Nov 15, 2016
Messages
54,392
A Hot and Suspense Love Agreement by Boss Tamilkamakathai

நானும் பொறுத்து பொறுத்து பார்த்து வேற வழி இல்லாம தான் என்னோட ராஜினாமா கடிதத்தை என்னோட பாஸ் டேபிளில் வைத்து விட்டு வந்தேன். அன்னைக்கு அவர் ஆபீஸுக்கு வரலை. மேலும் அவரு நாலு நாளா ஊர்ல இல்ல. அதனால அவரை போன்ல தொடர்பு கொள்ள முடில. வர்றதுக்கு இன்னும் 4 நாள் ஆகும்னு தெரிஞ்ச பிறகு தான் அன்னைக்கு ராஜினாமா கடிதத்தை எழுதி அவர் டேபிளில் வைத்தேன். ஆனால் வேலை பார்த்து கொண்டு தான் இருந்தேன். பாஸ் அலுவலகத்திற்கு வந்து அவரிடம் சொல்லி விட்டு போவது தான் முறை. ஆனால் ரிசைன் பண்ணிட்டா அவர் வர்ற வரைக்கும் ரிலாக்ஸா வேலை பார்க்கலாமேனு தான் அப்படியொரு முடிவை ரொம்ப ஆழமா யோசிச்சு எடுத்தேன்.

பாஸ் பரந்தாமன் வேற யாரும் இல்லை என்னோட இறந்து போன கணவர் கனகவேலோட நெருங்கி நண்பர் தான். என் கணவர் இறந்து போன பிறகு, வேலைக்கு போக வேண்டிய கட்டாயத்துல தான் அவரும் எனக்கு வேலை போட்டு கொடுத்தார். நானும் குடும்ப பொறுப்பை உணர்ந்து ரொம்பவே பொறுமையா தான் எல்லாத்தையும் பொறுத்துகிட்டு வேலை பார்த்துகிட்டு இருந்தேன். ஆனா லேசான புகைச்சலோடு போய் கொண்டு இருந்த உரல் நேற்று பூகம்பம் போல் வெடித்து பெரிய பிரளயமே ஏற்பட்ட பிறகு தான் நானும் அந்த முடிவை எடுத்தேன்.

அன்னைக்கு என்னோட ரிசைன் மேட்டர் தெரிஞ்சு லஞ்ச் டைம்ல எல்லோரும் துக்கம் விசாரிக்கிற மாதிரி சோக முகத்தோடு வந்து ஆறுதல் சொன்னாங்க. சில பேரு நீங்க போறது வருத்தமா இருந்தாலும் மானேஜர் மஞ்சுளா மாமிக்கு கொடுத்தீங்க பாருங்க. இந்த ஜென்மெத்துல மறக்க மாட்டாள். ஆமா நீங்க நம்ப பாஸுக்கு ரொம்ப வேண்டியவங்கனு மாமிக்கு தெரியாதா. தெரிஞ்சுமா உங்க கிட்டே சீண்டிகிட்டே இருந்தா என்று கேட்டனர்.

நானோ, "ஆபீஸ்ல எல்லா நெருக்கடியும் இருக்கத்தான் செய்யும், ஆனா அதுக்காக நான் பாஸ் எனக்கு தெரியும்னு தம்பட்டம் அடிச்சுகிட்டு, மிரட்டிகிட்டு அலைய முடியாது. மேலும் இதெல்லாம் நான் சமாளிக்கமுடியாம பாஸ் கிட்டே கம்ப்ளெயின்ட் பண்ணி சப்போர்ட் கேட்க முடியுமா. ஆனா இதுக்கு மேல இங்கே வேலை பார்க்க முடியாத சூழல்ல தான் நானும் ரிசைன் லெட்டரை எழுதி வச்சிருக்கேன்.

ஆனா பாஸே வந்து என்னதான் சமாதானம் பண்ணாலும் என் முடிவை மாத்த போறது இல்ல. வேலையில குறைனு திட்டினா கூட பரவாயில்லை. ஆனா அந்த மாமி எப்படி என்னோட உருவத்தையும், கலரையும் பத்தி சொல்லலாம், இதுக்கு அவங்க மேல போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணா கூட வன்கொடுமை கேஸ்ல விசாரிச்சு உள்ளே தள்ளிடுவாங்க" என்றேன்.

உடனே அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாக, "ஆமா ஆமா நம்பளோட பெர்சனாலிட்டி பத்திய பேசுறுதுக்கு மாமிக்கு என்ன தைரியம். ஆனா தப்பா நினைச்சுக்காதீங்க பிரமிளா, பாஸ் உங்களுக்கு வேண்டியவரா இருந்தாலும். எனக்கு என்னமோ இப்போதைக்கு மாமி மேல ஆக்சன் எடுக்கிற மாதிரி தெரியல. அந்த அளவுக்கு அவர் மாமி மேல ரொம்ப மோகத்துல இருக்காரு. மாமி கொஞ்சி பேசி மொத்தமா அவரை கவுத்து பாஸை கைக்குள்ள போட்டு வச்சிருக்கா.

என்ன பண்றது? அவரை மயக்க அந்த மாதிரி கலரும், சைஸும் தான் தேவை போல இருக்கு. அதுக்கா இன்னொரு தடவை வெள்ளைக்காரனுக்கு எங்க அம்மாவை வாக்கப்பட சொல்லி புதுசா பொறந்து வர முடியும்" என்று சொர்ணா சொன்ன போது அத்தனை பேரும் அந்த சூழ்நிலையிலும் வாய் விட்டு சிரித்து விட்டோம்.

சொர்ணா தான் அந்த ஆபீஸ்ல அத்தனை பேருக்கும் ஸ்ட்ரெஸ் பஸ்டர் போல். தன்னோட நகைச்சுவை உணர்வால் அத்தனை பேரையும் சிரித்து ரிலாக்ஸ் செய்ய வைத்து விடுவாள். பிறகு லஞ்ச் முடிந்து அத்தனை பேரும் வேலையை பார்த்து விட்டு வழக்கம் போல் மாலையில் நான் வீட்டுக்கு திரும்பி விட்டேன். அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. விடிகாலையில் எழுந்து அலுவலகத்துக்கு கிளம்ப தயாரான போது என் ஆபீஸ் வாசலில் ஒரு கால்டாக்ஸி வந்து நின்றது. அப்போது அதிலிருந்து இறங்கிய என்னோட பாஸ் பரந்தாமன் சிரித்துக் கொண்டே வீட்டுக்குள் வந்தார். நான் அவரைப் பார்த்து அதிர்ச்சியோடு வரவேற்றாலும் அவரு ரொம்ப அசால்ட்டா சிரித்துக் கொண்டே,

"சும்மா தான் காலை டிபனை உன் வீட்ல சாப்டுட்ட போலாமேனு வந்தேன். டிபன் கிடைக்கும்ல" என்றார்.

நான் "தாராளமா.டிபன் என்ன லஞ்ச் கூட பண்ணிதர்றேன். நானும் ஆபீஸ்க்கு கிளம்பிட்டு தான் இருந்தேன். ஆனா உங்களை எதிர்பார்க்கல. அய்யோ கையும் ஓடல காலும் ஓடல இருங்க முதல்ல காபி கொடுக்கிறேன். அப்புறம் உங்களுக்கு பிடிச்ச டிபனை பண்றேன்" என்றேன்.

இல்ல பிரமி, "நான் ஏர்போர்ட்ல இருந்து ஆபீஸ் டாக்குமென்டை என்னோட கேபின்ல வச்சுட்டு வீட்டுக்கு போக பிளான் போட்டேன். ஆனா ஆபீஸ் டேபிள்ள உன்னோட ரிசைன் லெட்டரை பார்த்து ஷாக் ஆகிட்டேன். உடனே போன் பண்ணலாம்னு தோணாலும், இதெல்லாம் போன்ல பேசுற மேட்டர் இல்லைனு உடனே என்னோட கார் டிரைவரை நீ காரை எடுத்துட்ட வீட்டுக்கு போ, எனக்கு ஆபீஸ்ல நிறைய வேலஇருக்கு. மதியம் லஞ்சுக்கு வருவேனு சொல்லிடுனு சொல்லிட்டு நானும் வீட்டுக்கு தகவல் கொடுத்துட்டு, ஒரு டாக்ஸியை பிடிச்சு நேரா உன்னை பார்க்கத்தான் வர்றேன். சொல்லு பிரேமி என்ன பிரச்சனை?" என்றார்.

பரந்தாமன் என் கணவரின் நண்பர் மட்டும் இல்லை. நாங்கள் கல்லூரியில் படித்த போதே நண்பர்களா இருந்தோம். அப்போது என் கணவர் என்னை விரட்டி விரட்ட லவ் பண்ணிய போது பரந்தாமன் தான் என்னிடம் தூது வந்து என் மனதை மாற்றி நண்பனான என் கணவருக்கு என்னை கட்ட வைத்தார். அப்போது இருவர் வீட்டிலும் கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்பதால் பரந்தாமன் உதவியோடு திருப்பதிக்கு ஓடிப்போய் திருட்ட தாலி கட்டிய பிறகு தான் பதிவு திருமணம் செய்து கொண்டோம்.

அப்போது பரந்தாமன் பேச்சிலர். இப்போது வரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் வீட்டில் தான் கொஞ்ச நாள் குடும்பம் நடத்தி விட்டு தனியாக வீடு பார்த்து வாழ ஆரம்பித்தோம். அதற்கு பிறகு சில வருடங்களில் கணவர் ஒரு விபத்தில் இறந்து போன பிறகு தான் பரந்தாமன் எனக்கு வேலை கொடுத்து உதவியாக இருந்தார். பரந்தாமனுக்கு ஒரு கட்டுக்குள் வாழ்வது பிடிக்காது. நானும் என் கணவரும் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் தனக்கென ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளவில்லை.

மேலும் என் முன்னாடியே என் புருஷனிடம் கட்டிகிட்டவனுக்கு ஒரு பெண்டாட்டி டா, ஆனா எனக்கு.என்பது போல் பேசி தீராத விளையாட்டு பிள்ளையாகவே வலம் வந்தார். அப்படி அவர் வலையில் விழுந்தவள் தான் மஞ்சுளா மாமி. ஒரு ஜூனியர் அஸிஸ்டென்டாக அலுவலகத்துக்குள் வந்து பாஸ் பரந்தாமனுக்கு தன் பரந்த மனசை காட்டி வேகமாக புரமோஷன் வாங்கி இப்போது மானேஜராகி அத்தனை பேரும் அதிகாரத்தோடும், ஆணவத்தோடும் ஆட்டி படைத்துக் கொண்டு இருக்கிறாள்.

முதலில் அவளுக்கு என்னை பார்த்த உடனே பிடிக்காமல் போய்விட்டது. நான் நல்ல குண்டா கருப்பாக இருப்பேன் என்பதாலோ என்னவோ நான் பக்கத்தில் போனாலே தீட்டு போல் தான் முகத்தை திரும்பி கொள்வாள். நான் அதையெல்லாம் பொறுத்து கொண்டு தான் என் வேலையை செய்தேன். ஆனால் அவளுக்கு நான் எது செய்தாலும், குறை குற்றம் சொல்லி என்னை சீண்டினாள்.

மேலும் பாஸ் அலுவலகத்தில் என்னிடம் அக்கறையோடு பேசுவதை பார்த்த அவளோட பதவிக்கு வேட்டு வைத்து விடுவேன் என்று பயந்தாலோ தெரியாது. இருவருக்கும் உரசல் புகைக்க ஆரம்பித்து அன்று பெரும் புயலாகி அவள் என்னை குண்டு கருப்பி என்று சொல்ல எனக்கு அழுகையை வந்தாலும் அடக்கிக் கொண்டு வேகமாக என் டேபிளுக்கு வந்து ரிசைன் லெட்டரை எழுதி பாஸ் டேபிளில் வைத்து விட்டு வந்துவிட்டேன். ஆனால் அதை பார்த்து விட்டு காலையிலேயே பாஸ் பரந்தாமன் என் வீட்டுக்கு வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. காபி சாப்பிட்டு விட்டு நிதானமாக பேச ஆரம்பித்தார்.

"பிரேமி என்னை பத்தி உனக்கு தெரியும். எனக்கு பிஸ்னஸ் தான் முதல் வைஃப். ஆனா அதுக்காக பிஸ்னஸை கட்டிகிட்டு அழுகிற கேஸ் கிடையாது. இந்த பொறுப்பே பெருசா இருக்கிறதுனால குடும்ப பொறுப்பை ஏத்துக்க விருப்பம் இல்ல. அதனால எனக்கு எந்த இழப்பும் இல்ல. இப்பவும் சுதந்திரமா ஜாலியாத்தான் இருக்கேன். வெளியே டூர் போயிட்டா அங்கே விதவிதமா என் மனசையும் உடலையும் ரிலாக்ஸ் பண்ணிப்பேன். ஆனா லோக்கல் சரக்கு அடிக்கிற கிக் மாதிரி தான் மஞ்சுளாவும். ஆனா அதுக்காக அவ ஆபீஸ்ல அட்வான்ட்ஜேக் எடுக்கிறானு தெரியும். அவளையும் கண்டிச்சிருக்கேன்.

ஆனா லெட்டர்ல நீ எழுதின வார்த்தையை படிச்சிட்டு எனக்கே படுகோபம் வந்துருச்சி. உன் வீட்டுக்கு கிளம்பும் போதே அவளுக்கு "சிட் அட் ஹோம். ஆல் யுவர் செட்டில்மென்ட் ஃபார்மாலிட்டிஸ் வில் பி டன் சூன்" னு மெசேஜ் பண்ணிட்டு தான் இங்கே உன்னை பார்க்க வந்தேன். அவளும் போன் மேல போன் போட்டுகிட்டு இருக்கா. நானும் அவளை ஏமாத்தல. அவளோட சர்வீஸுக்கு புரமோஷன்ல இருந்து இன்கிரீமென்ட் வரைக்கும் செட்டில் பண்ணியிருக்கேன். ஆனா நீ அவசரப்பட்டு முடிவெடுக்காதே.

நான் சொல்றதை நம்புறியோ இல்லை ஆனா சொல்றேன். அது தான் உண்மை. காலேஜ்ல உன் மேல ஆசைபட்டது முதல்ல நான் தான். ஆனா ஒரு தயக்கம். அதுக்குள்ள என் நண்பன் உன் மேல லவ்வு சொன்ன உடனே என்னோட மனசை மாத்திகிட்டேன். அதுகப்புறம் உனக்கே என்னோட சப்போர்ட் தெரியும். இப்போ கூட அவன் இறந்த பிறகு உனக்கு மாசம் ஒரு பேமண்டை கொடுத்து வீட்லயே இருக்க சொல்லியிருப்பேன். ஏன் உன்னை ஆபீஸ்ல வேலை கொடுத்தேன்.

எனக்கு அப்புறம் இந்த நிறுவனத்தை நீ தான் பார்த்துக்கணும். அதை லீகலா பண்றதுக்கு தான் இப்போ கூட மும்பை போயிட்டு வந்தேன். நம்பிக்கை இல்லேனா இந்த டாக்குமென்டை பாரு. இனிமே நீயும் என்னோட மானேஜிங் பார்ட்னர். எனக்கு அப்புறம் இந்த நிறுவனம் உன்னோடது தான். இது என்னோட காதல் பரிசுனு சொல்லி கொச்சைபடுத்த மாட்டேன். ஆனா இது திடீர்னு எடுத்த முடிவு இல்ல. என் நண்பன் இறந்த உடனே இந்த முடிவை எடுத்துட்டேன். அவன் இருந்தா அவனோட மானேஜ்மென்ட்ல இதை ஒரு டிரஸ்டியா மாத்தியிருப்பேன். இப்போ சொல்லு பிரேமி" என்ற போது நான் அழுகையை அடக்க முடியாமல் ஓடிப்போய் பரந்தாமனின் மார்பில் சாய்ந்து குலுங்கி குலுங்கி அழுதேன். அவர் மார்பில் செல்லமாக குத்திக் கொண்டு ஐ லவ் யூ, என்று புலம்பி அனத்தினேன்.

அப்போது அவர் என் முகத்தை நிமிர்த்தி என் கண்களை துடைத்து விட்டு நெற்றியில் முத்தமிட்டார். நான் ஆர்வத்தை அடக்கமுடியாமல் அவர் முகத்தில் முத்தமழை பொழிய அவரும் என்னை லிப்லாக் செய்து கொண்டு, "எப்படியோ என்னை வெட்லாக் குள்ளே கொண்டு வந்துட்டே. சரி.. இனிமே நானும் குடும்பஸ்தன் தான். சரி வா ஒன் வீக் ஹனிமூன் கொண்டாடிட்டு ஆபீஸுக்கு போன போதும்" என்று சொல்ல நான். "அதுவரைக்கும் பொறுக்கமுடியாது" என்று சொல்லி அவரை இழுத்துச் சென்று என் பெட்ரூம் கதவை சாத்தினேன்.
 
Back
Top